வாஷிங்டன், ஜுன் 6-அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் கெடுபிடிகளால் ஹெச்.1 பிவிசா விநியோகத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.அமெரிக்க நிறுவனங்களில் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் பணிபுரிய அங்கு அமெரிக்க அரசால் ஹெச்.1 பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க விசாக்களைப் பெற்று அங்கு சென்று பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கையும் ஏராளம். இந்த விசாவை வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள்அமெரிக்காவில் தங்கி பணிபுரியலாம். அவர்களது பணி சிறப்பாக அமையும் பட்சத்தில் மேலும் 3 ஆண்டுகள் இந்த ஹெச்.1 பி விசாவை நீட்டித்துக் கொள்ளலாம்.டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே பல்வேறு விதிமுறைகளை அமெரிக்க அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்தது. அமெரிக்க நிறு வனங்களில் அமெரிக்கர்களையே அதிக மாகப் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அழுத்தங்களால் இந்த ஆண்டில் விசாவுக்கான ஒப்புதல் வழங்கும் அளவு கடந்த ஆண்டைவிடக்குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ஒப்பு தல் வழங்கும் அளவு 85 சதவிகிதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 73 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.2016-17 நிதியாண்டில் மொத்தம் 3,73,400 விசாக்களுக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், 2017-18 நிதியாண்டில் மொத்தம் 3,35,000 விசாக்களுக்கு மட்டுமே ஒப்புதல்கிடைத்துள்ளது. ஹெச்.1 பி விசாக் களுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையும் 4,03,300லிருந்து 3,96,300ஆகக் குறைந்துள்ளது. இந்த விவரங்கள் அமெரிக்க குடியுரிமை அமைப்பு வெளி யிட்டுள்ள அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.