tamilnadu

img

தேர்தல் விதிகளுக்கு எதிரான டிரம்ப் கருத்துக்கு டுவிட்டர் ஆட்சேபம்

தேர்தல் விதிகளுக்கு எதிரான டிரம்ப் கருத்துக்கு டுவிட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 237 இடங்களில் ஜோபிடனும், 213 இடங்களில் டிரம்பும் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் மக்களிடம் பேசிய ஜோபிடன் நாம் எங்கிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்கிறோம். நாம் வெற்றி பெறும் பாதையில் இருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்து வாக்குகளும் எண்ணப்படும் வரை காத்திருப்போம். அரிசோனாவில் வெற்றி பெறுவோம். விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் பற்றி நன்றாக உணருங்கள். நாளை காலைக்குள் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று பேசி உள்ளார். 
இதுகுறித்து டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் ஜனநாயக கட்சியினர் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்ய விட மாட்டோம். வாக்கு பதிவு முடிந்த பின்னர் ஓட்டு போட முடியாது. மிகப்பெரிய வெற்றி வர போகிறது. இன்று இரவு ஓர் அறிக்கையை வெளியிடப்போகிறேன் என்று பதிவிட்டுள்ளார். 
இந்நிலையில் அமெரிக்க தேர்தல் முடிவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் கருத்து உள்ளது என டுவிட்டர் நிறுவனம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.