அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண்களுக்கு எதிராக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்ததை அடுத்து, அவர் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பேரழிவு நாட்டிலிருந்து வந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்கள், உலகத்திலேயே சக்தி மிகுந்த நாட்டின் அரசு எப்படி செயல்பட வேண்டுமென வகுப்பெடுக்கிறார்கள் என்ற தொனியில் மூன்று ட்வீட்டுகளை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டில் நேரடியாக அவர் அந்த பெண்களின் பெயரை குறிப்பிடவில்லை. ஆயினும் ரஷிதா டலீப், ஒகாஸியோ கோர்டெஸ், ஐயானா ப்ரெஸ்லி, இல்ஹான் உமர் உள்ளிட்ட பெண்களையே மறைமுக மாக குறிப்பிடுவதாக கூறப்படுகிறது.