tamilnadu

img

உலகில் சுமார் 70 லட்சம் அகதி குழந்தைகளுக்கு கல்வி இல்லை- ஐ.நா தகவல்

உலகம் முழுவதும் அகதிகளாக வாழும் 70 லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காத சூழல் உள்ளது என்ற ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 
தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் வசிக்கும் மக்கள் போர், வறுமை காரணமாக உலக முழுவதும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக மக்கள் இடம்பெயர்ந்து  வாழ்கின்றனர். இவ்வாறு வசித்து வரும் 70 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காத சூழல் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது:- 
பள்ளிகள் பற்றாக்குறை, ஆசிரியர்கள் குறைவு காரணமாக அகதிகள் முகாமில் வசிக்கும் குழந்தைகள் கல்வி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 5 வயது முதல் 18 வரையில் உள்ள சுமார் 3 லட்ச குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டுள்ளனர்.
அகதிகள் கல்வி தொடர்பாக நாம் நிதியை செலவிட வேண்டிய தேவை இருக்கிறது. இது தொடர்பான பணியில் நாம் இறங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 91% இருக்க அகதி முகாம்களில் வசிக்கும் குழந்தைகளின் சேர்க்கை சதவீதம் 63% ஆக உள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.