tamilnadu

img

அசாமில் பானி புயலால் ஏற்பட்ட கனமழையால் தண்ணீரில் மூழ்கிய 8 கிராமங்கள், விவசாய நிலங்கள்

பானி புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக அசாம் மாநிலத்தில் 8 கிராமங்கள் மற்றும் அறுவடைக்கு காத்திருந்த விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.


கடந்த ஒரு வாரமாக ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பானி புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பானி புயலால் ஏற்பட்ட கனமழையால் தற்போது அசாம் மாநிலத்தின் தெற்கு பகுதியான பொகோவில் உள்ள பரளிபாரா, பகர்தோலி உள்ளிட்ட 8 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதுமட்டுமல்லாமல் சுமார் 3000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.


கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சில கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அசாம் மாநிலத்தின் வடிகால் துறையின் அலட்சியத்தால்தான் விவசாய நிலங்கள் பெரும் சேதத்தை கண்டுள்ளதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.