சென்னை, ஆக. 25 - ஊதிய உயர்வு கோரி ஆண்ட்ரூயூல் நிறுவன ஊழியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளது. நிர்வாகத்தின் பிடிவாதப் போக்கே போராட்டம் தொடர்வதற்கு காரணம் என்று தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சென்னை பெருங்குடியில் செயல்படும் ஆண்ட்ரூயூல் அண்டு கம்பெனி லிட் செயல்படுகிறது. லாப மீட்டும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான இங்கு உயர் மின்ன ழுத்த மின்மாற்றிகளை (டிரான்ஸ்பார்மர்) தயாரிக்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் 72 தொழி லாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்க ளுக்கு அதிகாரிகளாக 42 பேர் உள்ள னர்.
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை 1-4-2017 அன்று தொடங்கியது. கடந்த 30 மாதத்தில் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒப்பந்தம் ஏற்படவில்லை. மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் ஆலோசனைகளையும் நிர்வாகம் செயல்படுத்தவில்லை. எனவே, ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடித்து ஊதிய உயர்வு வழங்கக் கோரி கடந்த ஆக.19 அன்று தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனையடுத்து இரண்டு முறை மத்திய தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் இயக்குநர் மோகன் கலந்து கொண்டார். இருப்பினும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் போராட்டம் இன்று (நவ.26) 100 வது நாளாக நடக்கிறது.
இதுகுறித்து டிரான்ஸ்பார்மர் அண்டு சுவிட்ச்கியர் எம்பிளாயீஸ் யூனியன் (சிஐடியு) சங்கத்தின் தலைவர் எஸ்.அப்பனு கூறுகையில், “உரிமைகளை கேட்கும் தொழிலாளர்களை பணி மாற்றம், தற்காலிக நீக்கம், பதவியிறக்கம் செய்து பழிவாங்கியது. காலிப்பணியிடங்களை நிரப்பாமல் தொழிலாளர்கள் மீது பணிப்பளுவை திணித்தது. 25 வருடமாக பணியாற்றிய தொழிலாளிக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே நியாயமான ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடந்து வருகிறது. பழிவாங்கும் நோக்கோடு 2 தொழிலாளர்களை கொல்கத்தாவிற்கு பணியிட மாற்றம் செய்ததைக் கூட நிர்வாகம் ரத்து செய்ய மறுக்கிறது.” என்றார். பொதுச் செயலாளர் பி.கருணா கரன் கூறுகையில், “ நிறுவனத்தின் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரும் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ளவை. அவற்றை தனியாரிடம் கொடுத்து தயாரிக்கி றார்கள். இதனால் 6 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டு ள்ளது. ஊதிய உயர்வு கொடுத்தால் சில லட்சங்கள்தான் கூடுதல் செலவாகும். இருப்பினும் நிர்வாகம் பிடிவாதப் போக்கோடு உள்ளது” என்றார். “சந்தையில் டிரான்ஸ்பார்மர்க ளுக்கு அதிக தேவை உள்ளது. அதீத லாபம் ஈட்ட வேண்டிய சூழலில் பிரச்சனையை பேசி தீர்க்காமல், நிர்வாகம் அராஜகமாக நடந்து கொள்கிறது. மத்திய அரசு அறிவித்த பஞ்சப்படியை (டிஏ) கூட வழங்க மறுக்கிறது. ஓரிரு கோரிக்கைகளை பரிசீலித்தால் கூட வேலைநிறுத்தம் தொடர்வதை பரிசீலிப்போம். நிர்வாகம் ஏற்கெனவே ஒப்புக் கொண்ட கோரிக்கைகளைகூட நிறை வேற்ற மறுப்பதுதான் வேலை நிறுத்தம் நீடிப்பதற்கு காரணம்” என்றும் கருணாகரன் கூறினார்.