திருச்சிராப்பள்ளி, நவ.12- திருவானைக்காவல் முதல் ஸ்ரீரங்கம் வளைவு சாலை யில் உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை யில் படுத்து உருளும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ஸ்ரீதர் தலைமையில் திங்களன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், மாநகர் மாவட்ட பொருளா ளர் ஜெய்குமார், மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநகர் மாவட்ட துணைத் தலைவர் கிச்சான், ஸ்ரீரங்கம் பகுதி செயலா ளர் தர்மா, பகுதி தலைவர் லோகு, பகுதி பொருளாளர் சந்துரு, ஸ்ரீரங்கம் கோட்ட இளநிலை பொறியாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருவானைக்காவல் முதல் ஸ்ரீரங்கம் வளைவு சாலை யில் உள்ள குண்டும், குழியுமான இடத்தில் செங்கல்தூள் மூலம் உடன் சரி செய்யப்படும் என நெடுஞ்சாலை துறையினர் உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.