உளுந்தூர்பேட்டை ஆகஸ்ட் 22- திருநாவலூர் ஒன்றியம் இருந்தை கிராமத்தில் உள்ள அத்தனை தெருக்களும் ஒருநாள் மழையிலேயே குட்டையாக மாறி பொதுமக்களும், பெண்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் இருந்தை கிராமத்தில் இரண்டாயி ரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிருத்துவ மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், பிற பகுதி மக்களும் வசிக்கக்கடிய கிராமத்திலிருந்து ஏராளமானோர் வெளியூர் வேலைகளுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் தின சரி செல்கின்றனர். ஆனால் கிராமத்தின் அத்தனை தெருக்களி லும் கழிவுநீரோ, மழைநீரோ செல்வதற்கான கால்வாய் வசதி என்பது ஊராட்சி நிர்வாகத்தால் இதுவரை செய்து தரப்பட வில்லை. புதனன்று(ஆக.21) இரவு முழுவதும் பெய்த மழையால் கிராமத்திலுள்ள அத்தனை தெருக்களிலும் மழைநீர் தேங்கி குட்டையாக மாறியுள்ளது. கிழக்குவீதி, வடக்குவீதி, தெற்கு வீதி, மாதாகோயில் தெரு, புதுமனைத்தெரு என அத்தனை தெருக்களிலும் மழைநீர் செல்வதற்கான வழி இன்றி மிகப் பெரிய குளம், குட்டை போல் பாதையிலேயே தேங்கியுள்ளது. இதனால் நடந்து செல்லக்கூடிய பள்ளி மாணவ, மாணவியர், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், இருசக்கர வாகன ஓட்டிகள், பெண்கள் என அனைவரும் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். அனைத்து தெருக்களுக்கும் வடிகால் வசதி செய்து தரக்கோரி பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் கவலைப் படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத சூழலில் அதி காரிகளின் நிர்வாகத்தில் இன்னும் நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்படும் முன் வடி கால் வசதி ஏற்படுத்தி தண்ணீர் சென்று சேரக்கூடிய வாய்க்கால் களை தூர்வாரி முறையாக மழைநீரை சேமிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு கிளைச் செயலாளர் ஆரோக்கியதாஸ் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.