tamilnadu

img

டெல்டா மாவட்டங்களை பாழாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக!

தரங்கம்பாடி, ஜூன் 10- காவிரி டெல்டா மாவட்டங்களை பாழாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில் தெருமுனைக் கூட்டம் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் ஞாயிறு மாலை நடைபெற்றது.   முன்னதாக தாலுகா முழுவதும் இருசக்கர வாகனங்கள் மூலம் 200-க்கும் மேற்பட்டோர் மேற்கொண்ட பிரச்சாரப் பயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகை மாலி உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன், மாவட்டக்குழு உறுப்பினர் சிம்சன், இராசையன், ரவிச்சந்திரன், முன்னாள் வட்டச் செயலாளர் கோவிந்தசாமி, வட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், மார்க்ஸ், பஷீர், தமிழ்வாசகம், வெண்ணிலா, கண்ணகி, வாலிபர் சங்க வட்டத்தலைவர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மயிலாடுதுறையில் கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு வட்ட செயலாளர் மேகநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் உரையாற்றினர்.

நன்னிலம் 
கட்சி சார்பில் இருசக்கர வாகனப் பிரச்சார பேரியக்கம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் கடைத்தெருவில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் தியாக ரஜினிகாந்த், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சலாவூதீன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார். ஒன்றியக் குழு நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, மகாலிங்கம், நன்னிலம் நகர செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  புதுக்கோட்டை நெடுவாசலிலும், கும்பகோணம் கதிராமங்கலத்திலும் கிராம மக்கள் ஒன்று திரண்டு நூற்றுக்கு மேற்பட்ட நாட்கள் போராடி இத்திட்டத்தை முறியடித்தது போல் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வீழ்த்தி காவிரி டெல்டாவை பாதுகாப்போம் என்று கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். 

அரியலூர்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி எக்ஸ்ரோடு பகுதியில்  ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். மாவட்ட செயலாளர் ஆர்.மணிவேல், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் சி.உத்திராபதி, தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கே.மகாராஜன், மாவட்ட பொருளாளர் இளவரசன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.பத்மாவதி, மாவட்ட துணைத்தலைவர் எஸ்.மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் 
கட்சியின் கும்பகோணம் குடந்தை ஒன்றியம் சார்பாக பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பிஜேசுதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் மாவட்ட குழு உறுப்பினர் சிநடராஜன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கணேசன், நாகமுத்து, செல்வமணி, சுதாகர் தமிழினியன், ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கும்பகோணம் ஒன்றியம் பெருமாண்டி, கருப்பூர் கள்ளப்புலியூர் கோவிலாச்சேரி புத்தூர், சோழபுரம், கல்லூர் உத்தமதானி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்றது.

புதுக்கோட்டை 

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. கறம்பக்குடியில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன் தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், ஏ.ஸ்ரீதர், கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன், தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், கந்தர்வகோட்டை ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் உள்ளிட்டோர் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பிரச்சாரம் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் தொடங்கி திருமணஞ்சேரி, கரு.வடதெரு, கரு.தெற்குத்தெரு, வானக்கண்காடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆலங்குடியை வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பனர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உரையாற்றினர்.

அறந்தாங்கி 
சுப்பிரமணியபுரத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ் தலைமையில் துவங்கிய பிரச்சாரப் பயணம் அரசர்குளம், அறந்தாங்கி, ஆவணத்தாங்கோட்டை உள்ளிட்டவை வழியாக ஆலங்குடியில் நிறைவு பெற்று பொதுக் கூட்டம் நடைபெறுகிறது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ் சி.சுப்பிரமணியன் மாவட்ட குழு உறுப்பினர் ஏபாலசுப்பிரமணியன் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா விதொச வேவீரையா மற்றும் வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கீழ்வேளூர்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்தில் பிரச்சார இயக்கம் திங்கட்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூர் கடைத்தெருவில் துவங்கிய இருசக்கர வாகனப் பிரச்சார இயக்கத்திற்குக் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.என்.அம்பிகாபதி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து சிறப்புரையாற்றித் துவக்கி வைத்தார். இருக்கை, வலிவலம், சாட்டியக்குடி, வெண்மணி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கம் நிகழ்ந்து அன்று முன்னிரவில் தேவூர்க் கடைத் தெருவில் நிறைவு பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் நிறைவுரையாற்றினார்.  பிரச்சார இயக்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.எம்.அபுபக்கர், எம்.செல்வராஜ், எம்.சாந்தி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.செல்வராஜ், ஆர்.முத்தையன், டி.துரைராஜ், இ.மாரிமுத்து, ஏ.சந்திரசேகர், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.நடராஜன், எஸ்.உமாதேவி, எஸ்.பாண்டியன், வி.அண்ணாதுரை பங்கேற்றனர்.