tamilnadu

போக்குவரத்து பணிமனைகள் முன்பு சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. பி.எப் வட்டி விகிதத்தையும் குறைத்துள்ளது. மாநில அரசானது, அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை நிறுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இந்தத் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து சிஐடியு சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 பணிமனைகள் முன்பு சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இப்போராட்டத்தில் மத்திய சங்க உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி, சம்மேளன நிர்வாகி எம்.வெள்ளைத்துரை, மண்டலத் தலைவர் சுந்தர்ராஜன், பொதுச் செயலாளர் எம்.கார்மேகம், பொருளாளர் எம்.முத்துராஜ் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.