வேலூர், அக். 4- வேலூர் மாவட்டத்தில், ஆம்பூர், வாணி யம்பாடி, குடியாத்தம் ஆகிய வட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆம்பூர் ஆர்.ஐ.அலுவலகம் அருகே கிளைச் செயலாளர் டி.ஆர்.சலாம் தலைமை யில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சக்திவேல், வட்டச் செயலா ளர் வ.அருள்சீனிவாசன், ஆர்.மணிமாறன் எஸ்.இளங்கோவன், கே.ஏ.பாபு, பூபாலன் உட்பட பலர் பங்கேற்றனர். ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணியை உடனே துவங்க வேண்டும்,எம்.வி.சாமி நகர், திருவள்ளுவர் தெரு பகுதியில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண் டும், அனைத்து தெருக்களையும் சீர்செய்ய வேண்டும், நதிசீலாபுரம் கானாற்றை தூர்வார வேண்டும் என்றும் வலியுறுத்தினர். வாணியம்பாடி வட்டம் மதனஞ்சேரி கிராமத்தில் கிளைச் செயலாளர்கள் ராஜேந்தி ரன், பிரியா ஆகியோர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.தயாநிதி, மாவட்டக் குழு உறுப்பினர் வ.அருள் சீனிவாசன், வட்டச் செயலாளர் இந்துமதி, ஆர்.வி.குமார்,அர்சுணன், சரளா, ராஜா, ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் உரை யாற்றினர். குடியாத்தம் பிச்சனூர் அரசமரம் அருகில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விண்டல் விகி, சம்பந்தம், வெங்கடேசன், ஆகியோர் தலைமை தாங்கினர். நகரச் செயலாளர் காத்த வராயன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி கண்டன உரையாற்றினார். சு. சம்பத்குமார், கே.சாமிநாதன், பி.குணசேகரன், சி.சரவ ணன், என்.பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சக்திவேல் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.