tamilnadu

img

பாரத் பெட்ரோலிய ஊழியர் வேலை நிறுத்தத்திற்கு தடை

சென்னை,நவ.25- பாரத் பெட்ரோலியம் தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாரத் பெட்ரோலிய நிறு வனத்தின் 53.29 விழுக்காடு பங்கு களை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதைக்  கண்டித்து நவ.28ஆம் தேதி காலை  6 மணி முதல் 29 ஆம் தேதி காலை  6 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக  ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.

இந்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அந்நிறுவனத்தின் தென் மண்டல பொதுமேலாளர் ஷெனாய், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தொழில் தக ராறு சட்டத்தின்படி, பொது பயன்  பாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட 6 வார காலத்திற்கு முன் நோட்டீஸ் வழங்க வேண்டும். எனவே, இந்த போராட்டம் சட்டவிரோதமாக நடை பெறவுள்ளது. மேலும், போராட்டம்  நடைபெறவுள்ள நாட்களில் தமி ழகம் முழுவதும் உள்ள பாரத்  பெட்ரோலிய நிறுவன அலுவலகங்க ளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க  உத்தரவிட வேண்டும் என்று கூறப் பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி பதி எஸ்.எம் சுப்பிரமணியம், ஊழி யர்களின் போராட்டத்திற்கு தடை விதித்தார். நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் பாரத் பெட்ரோலிய நிறுவன அலுவலகத்திற்கு போலீஸ்  பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.