பிளாஸ்டிக் சங்க தலைவர் ஜி.சங்கரன் தகவல்
சென்னை, செப். 25- பிளாஸ்டிக் தடையால் 50 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தின் (டான்பா) தலைவர் ஜி.சங்க ரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரைக்கும் உலகில் உற்பத்தியாகக் கூடிய பிளாஸ்டிக் கழிவுகளில் சுமார் 60 விழுக்காடு அளவுக்கு சீனா இறக்குமதி செய்து, மறுசுழற்சி செய்து வந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்தி விட்டது.
பல நாடுகள் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றன. இதனால், இந்தியா வும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் மேலை நாடுகளின் பிளாஸ்டிக் தனி நபர் நுகர்வுக்கும், இந்தியாவின் தனி நபர் நுகர்வுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்தி யாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டு தடை செய்வது எந்த விதத்தில் நியாயம். வளர்ந்த நாடுகளில் தெருக்களில் வீசி எறியும் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்வது மிகவும் குறைவு. இந்தியாவில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படு கிறது. தற்போது இந்தியா முழுவதும் சில மாநிலங்க ளில் தடைசெய்யப் பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யக் கூடியதாகும்.
ஏழ்மை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் இந்தியாவில் ஏற்கனவே 60 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரை பிளாஸ்டிக் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுகின்றது. மீதம் உள்ள கழிவுகளைக் கொண்டு பிளாஸ்டிக் தார் சாலை அமைப்பது, மின்சாரம், பெட்ரோல், டீசல் , கான்கிரிட் கற்கள் தயாரிப்பது என பல்வேறு வகையில் பயன்படுத்த லாம். அரசின் உதவி இல்லாவிட்டாலும் மறு சுழற்சி தொழில் குமரி முதல் காஷ்மீர் வரை நடைபெறு கிறது.
இந்தியா முழுவதும் 40,000 பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 98 விழுக்காடு சிறு,குறுந் தொழிற்சாலை யாகும். அப் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் பல்லாயிரக்கணக்கான கடைகள் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றுமதி செய்யும் 2 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டிலும் சுமார் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மத்திய-மாநில அரசுகளுக்கு 50 ஆயிரம் கோடி வரி வருவாயை ஈட்டித் தருகிறது. பிளாஸ்டிக் உற்பத்தி யினாலோ, பொருட்களை பயன்படுத்துவதாலோ சுற்றுச்சூழல் பிரச்சனை இல்லை. ஆனால் குப்பை களை முறையாக மேலாண்மை செய்யாத மாநில அரசு களால்தான் சுற்றுச்சூழல் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே அக்டோபர் 2 முதல் எந்த ஒரு பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்யாமல், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக கையாள நடவடிக்கை மேற்கொள்ளவும், இத்தொழிலை நம்பியிருக்கும் பல ஆயிரம் இளம் சிறு, குறு தொழில் முனைவோர்கள், அதை நம்பி இருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை காப்பாற்றும் வகையில் மத்திய அரசு அறி விப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது சென்னை பிளாஸ்டிக் சங் கத்தின் செயலாளர் காமராஜ், நிர்வாகிகள் லட்சும ணன், வீரமுத்து, ராமசாமி ஆகியோர் உடனிருந்த னர்.