tamilnadu

2020-ல் உணவு சில்லரை விற்பனை ரூ.61 லட்சம் கோடியை அடையும்

தஞ்சாவூர், ஜூன் 29- 2020 ஆம் ஆண்டில் உணவு சில்லரை விற்பனையில் ரூ. 61 லட்சம் கோடியை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது என்றார் மத்திய உணவு பதனத் தொழில்கள் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி. தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவு பதப்படுத்துதலில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த தேசிய அள விலான கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் பேசியது: உலக அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உணவு சந்தையில் நாம் வளர்ந்து வரும் நிலை யில், உணவு சில்லரை விற்பனையில் 2020 ஆம் ஆண்டில் ரூ.61 லட்சம் கோடியை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. பால், வாழை, மாம்பழம், நறுமணப் பொருட்கள், இறால், பயறு வகைகள், சிறு தானியங்கள், காய்கறிகள், தேயிலை ஆகியவற்றில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது. அறு வடைக்குப் பிந்தைய இழப்பால் விநி யோகத் துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இழப்பு கணிச மாக தொடர்வது வருத்தமளிக்கிறது. அழுகாத விளை பொருட்களில் 3 முதல் 10 சதவீதமும், பாதி அழுகும் தன்மையுடைய பொருட்களான பால், மீன், மாமிசம், முட்டை ஆகியவற்றில் 10 முதல் 20 சதவீதமும், பழங்கள், காய்கறிகளில் 10 முதல் 20 சதவீதமும், தோட்டக்கலைப் பொருட்களில் 5 முதல் 16 சதவீதமும் தோராய இழப்பாக உள்ளது. எனவே உணவு உற்பத்திக்குப் பிறகு பதப்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய தேவை அதிகரித் துள்ளது. இந்தியாவின் உணவு சந்தையில் உணவு பதப்படுத்துதலின் பங்களிப்பு 32 சதவீதமாக உள்ளது. உணவு பதப் படுத்துதல் மாறி வரும் சூழலில் ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்பு கள் வருவதால் அத்துறை விரிவடைந்து வருகிறது. விவசாயிகளுக்கு உதவும் விதமாக மத்திய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் 42 உணவு பூங்காக்களை அமைத்துள்ளது. மேலும், உணவு பதப்படுத்துதலுக்குச் சிறப்பு நிதி நிறுவனங்களின் மூலம் நிதியுதவி செய்யப்படுகிறது. விலைவாசி ஏற்றத் தாழ்வுகளைக் கண்காணிப்பதற்குப் பசுமைத் திட்டங்கள் போன்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் வரும் நவ.1-ம் தேதி உலக உணவு மாநாடு நடத்தப்படவுள்ளது என்றார் ராமேஸ்வர் டெலி.  முன்னதாக கணக்கீட்டு மாதிரிய மைத்தல் மற்றும் நானோ அளவைச் செயலாக்கு மையத்தைத் திறந்து வைத்தார்.