திருவாரூர், மே 18-திருவாரூர் ஆட்சியர் கூட்டரங்கில், நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணும் பணி மே 23 அன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலர், ஒரு உதவி அலுவலர், ஒரு நுண் பார்வையாளர் என மொத்தம் 357 அலுவலர்களும், வாக்கு எண்ணிக்கைமைய இதர பணிகளுக்காக 372 அலுவலர்களும் ஆகமொத்தம் 729 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கும் வேட்பாளர் தரப்பில் ஒரு முகவர் நியமனம் செய்யப்பட்டிருப்பார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும்கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுமையாக கண்காணிக்கப்படும் என மாவட்டதேர்தல் அலுவலர் த.ஆனந்த் தெரிவித்தார்.