tamilnadu

img

வரி உயர்வை கண்டித்து திருவானைக்காவல், ஸ்ரீரங்கத்தில் சிபிஎம் தெருமுனை பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 31- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. பல மடங்கு உயர்த்தப்பட்ட வீட்டு வரி, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். உய்யக் கொண்டான், காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் சாக்கடை கலப்பதை தடுக்க வேண்டும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தலைமையில் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் பகுதி யில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. பிரச்சாரத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் வேளாங்கண்ணி தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் வீரமுத்து, ரகுபதி ஆகி யோர் பேசினர். இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.