திருச்சிராப்பள்ளி, அக்.22- மின்வாரியம் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட குறைகளை களைந்து மின் வாரியமே நடத்திட வேண்டும். தினக்கூலி பணிகளுக்கு இணைத்து ஓய்வூதியத் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலம் அமைப்பு சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கருத்துரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் கல்யாண சுந்தரம் சிறப்புரை ஆற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் வாழ்த்துரை வழங்கி னார். துணைத் தலைவர்கள் பஷீர், வெள்ளைதுரை, சின்னராசு, பன்னீர்செல்வம், இணைச் செயலாளர்கள் சிவஞானம், பஞ்சாபிகேசன், சந்திரன், தனபால் ஆகியோர் கலந்து கொண்ட னர். பொருளாளர் கண்ணையன் நன்றி கூறினார்.