tamilnadu

img

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்

தரங்கம்பாடி, ஜூன் 30- நாகை மாவட்டம் ஆக்கூர், திருக்கடையூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சனியன்று நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்குப் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ.,பவுன்ராஜ் மடிக்கணினிகளை வழங்கினார்.  செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலர்(சீர்காழி) குமார், தலைமையாசிரியர்கள் குணமாலா(பொ), ஸ்ரீதர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.     இதே போல் தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்டத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 129 பள்ளிகளில் பயிலும் 11, 12-ம் வகுப்பைச் சேர்ந்த 33,786 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், முன்னாள் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றித் தலைவர் ஆர்.காந்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மா.இராமகிருட்டிணன், முன்னாள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.