திருச்சிராப்பள்ளி, டிச.1- திருச்சி அடுத்த திருவரம்பூர் காந்தி நகரில் புதிய ரேசன் கடை கட்டி அதை பல மாதங்களாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டி கிடப்பதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இளம் பெண்கள் கிளை சார்பில் பூட்டை உடைக்கும் போராட்டம் அறிவிக்கப் பட்டது இதையொட்டி திருவரம்பூர் வட்டாட்சியர் தலைமையில் வட்டா ட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இளம்பெண்கள் நிர்வாகிகள் ஜான்சிராணி, நிவேதா, மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், காட்டூர் பகுதி செயலாளர் ஆதம்தீன், மாதர் சங்க தவுலத் ராதாமணி, திரு வெறும்பூர் கூட்டுறவு சங்க அதி காரிகள் மற்றும் காவல்துறையினர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் இன்னும் 20 நாட்களுக்குள் காந்திநகர் ரேசன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி னர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.