அனுமதியின்றி மண் எடுத்த வாகனங்கள் பறிமுதல்
சீர்காழி, ஜூன் 12- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே குமிளங்காடு கிராமத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள இடத்தில் சாமியம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் (37), கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே மண்டபமேடு தெற்கு தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் (30), கொள்ளிடம் அருகே ஆயங்குடிபள்ளம் கிராமம் அசோக் (27) அரசாலமங்கலம் கிராமம் பாலமுருகன்(33) ஆகியோர் அவர்களுக்குச் சொந்தமான ஜே.சி.பி எந்தி ரம் மற்றும் டிராக்டர்கள் உதவியுடன் அனுமதியின்றி சுவுடு மண் எடுத்துக் கொண்டிருந்தனர். தகவலறிந்த கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சவுடு மண் எடுக்க பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து, 4 பேரையும் கைது செய்தனர்.
தீ தடுப்பு ஒத்திகை
திருச்சிராப்பள்ளி, ஜூன் 12- தமிழ்நாடு தீயணைப்பு-மீட்புப்பணிகள் துறை சென்னை இயக்குநர் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட உதவி அலு வலர் கருணாகரன் தலைமையில் ஸ்ரீரங்கம் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்க்யூராஜா, மற்றும் தீ தடுப்பு அலுவலர்கள், கல்லூரி முதல்வர், மாணவ, மாணவியர் முன்னிலையில் தீ தடுப்பு மற்றும் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
ஸ்ரீரங்கம் தாலுகாவில் ஜமாபந்தி
திருச்சிராப்பள்ளி, ஜூன் 12- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை யில் ஜமாபந்தி செவ்வாயன்று தொடங்கியது. இது ஜூன் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அந்தநல்லூர் பகுதியை சேர்ந்த பெட்டவாய்த் தலை, சிறுகமணி(மேற்கு), சிறுகமணி (கிழக்கு), பெருக மணி, திருப்பராய்த்துறை, கொடியாலம், அந்தநல்லூர், பெரியகருப்பூர், திருச்செந்துறை, கடியாக்குறிச்சி, அல் லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து உதவி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இதில் 81 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 17 மனுக் களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 64 மனுக்க ளுக்கு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம் மற்றும் வருவாய்த்துறை அதி காரிகள் கலந்து கொண்டனர்.
வகுப்புகள் தொடக்கம்
தரங்கம்பாடி, ஜூன் 12- நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஈச்சங் குடி ஊராட்சி கடலியில் இயங்கி வரும் வசந்தா முருகு பாலி டெக்னிக் கல்லூரியில் 2019 கல்வியாண்டிற்கான முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்பு கள் புதனன்று துவங்கப்பட்டன. கல்லூரி தனி அலுவலர் கண்ணன், முதல்வர் மணிகண்டன் மற்றும் விரிவுரை யாளர்கள் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுக்கோட்டை, ஜூன் 12 - புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற குடிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். புதுக்கோட்டை வட்டத்திற்கான ஜமாபந்தி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதனையொட்டி மாலையில் குடி மக்கள் பங்கு பெறும் ‘குடிகள் மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான தடை யின்மை சான்று 1, உட்பிரிவு பட்டா மாறுதல் 1, பட்டா மாறுதல் 11, முதியோர் உதவித்தொகைக்கான ஆணை 5, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட 14 நபர்களுக்கு வீட்டு மனை பட்டா என மொத்தம் 32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர்கள் பரணி, திருமலை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் தொடர்பான புகார் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, ஜூன் 12- 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொடர்பான புகார் களை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு அமர்விடம் தெரிவிக்குமாறு புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான வன்கொடு மைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தை களின் கல்வி, உடல்நிலை, மருத்துவம், விடுதி சேர்க்கை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வகையான புகார்கள் மற்றும் குறைகளை கேட்டு தீர்வு காணுதல் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தின் குழு அமர்வு 21.6.2019 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், இராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, விருது நகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சிவ கங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகளின் குறைகள் தொடர்பான புகார்களை கேட்டறிந்து அதற்கான தீர்வு வழங்கப்படும். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் அனைத்து வகையான புகார்கள் குறித்து நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ 19.6.2019 மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322-222270, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல கம், முன்னாள் படைவீரர் மைய வளாகம், கல்யாணராம புரம் 1-ம் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை - 2, தொலை பேசி எண்-04322-221266 என்ற முகவரிகளில் நேரில் சென்று புகார் தெரிவிக்கலாம். மேலும் 21.6.2019 அன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யரகத்தில் நடைபெறும் குழு அமர்வில் தங்களது குழந்தை கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்து நேரில் சென்றும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்
தரங்கம்பாடி, ஜூன் 12- நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் தேவா டுடோ ரியர் சென்டரில் ஒருநாள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் புதனன்று நடைபெற்றது. சக்தி அகாடமி மற்றும் தேவா டுடோரியல் இணைந்து நடத்திய இம்முகாமில் ஏராள மானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். தேவா டுடோ ரியல் முதல்வர் தேவசகாயம், சக்தி அகாடமி இயக்குநர் அறிவழகன் உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்கினர்.