திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் மேட்டுப்பாளையத்தில் மாதர் சங்க ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான ருக்மணி அம்மாள் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மாதர் சங்க தா.பேட்டை ஒன்றியத் தலைவர் தேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிபிஐஎம் தா.பேட்டை ஒன்றிய செயலாளர் காமராஜ் உரையாற்றினார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.