tamilnadu

img

அசோக் படுகொலை கண்டித்து குடவாசலில் கூட்டம்

குடவாசல், ஜூலை 1- நெல்லை மாவட்ட வாலிபர் சங்க பொருளாளர் தோழர் அசோக் படு கொலையை கண்டித்து திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே கண்டன கூட்டம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  கூட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் பி.குமரேசன் தலைமை தாங்கினார். தலைவர் பகத்சிங் முன்னிலை வைத்தார். மாவட்டச் செய லாளர் கே.பி.ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சுர்ஜித் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர்.லட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.இன்பநாதன், கே.ராமதாஸ், டி.ஜி.சேகர், வலங்கைமான் வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் பி.விஜய், தலை வர் ஜெ.ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.