tamilnadu

மயிலாடுதுறை மற்றும் கரூர் முக்கிய செய்திகள்

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை, பிப்.7-  ஏவிசி கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டமும் நுகர்வோர் பாது காப்பு மன்றமும் இணைந்து நடத்திய நுகர்வோர் பாதுகாப்பு விழிப்பு ணர்வு கருத்தரங்கம் பொருளி யல் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. நுகர்வோர் பாது காப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ்.சரண்யா தேவி வரவேற்றார்.  முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் தலைமை வகித் தார். புல முதன்மையர் முனைவர். எஸ். மயில்வாகணன் பேசினார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கி ணைப்பாளர் முனைவர்  ஏ.யமுனா நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களும், நுகர்வோர் பாதுகாப்பு மன்ற மாணவர்களும் செய்திருந்தனர்.

சங்க நிர்வாகிகளின் பணி நீக்க உத்தரவு ரத்து களத்தில் போராடியவர்களுக்கு அரசு ஊழியர் சங்கம் நன்றி

கரூர், பிப்.7- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட  தலைவர்  எம்.சுப்பிர மணியன், செயலாளர் கே.சக்திவேல் ஆகியோர்  கூட்டாக மாவட்டக் குழு சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, கரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்து வரும் செவிலியர்களின் கோ ரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மனை நிர்வாகத்திடம் முறையீடு செய்திட கடந்த 2019 ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில முன்னாள் துணைத்தலைவ ரும், தற்போதைய கரூர் மாவட்ட தலைவருமான எம்.சுப்ரமணியன் மற்றும் அரசு நர்சுகள் சங்கத்தின் மாநி லத் துணைத் தலைவர் மு.நல்லம்மாள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், செல்வராணி மற்றும் தனலட்சுமி ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தொடர்ச்சியான இயக்கங்களை நடத்தியதன் காரணமா கவும், துறை அதிகாரிகளை தொடர்ச்சி யாக சந்தித்து கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசியதின் காரணமாகவும், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை புதுக்கோட்டையில் உள்ள இலுப்பூரில் அவரது இல்லத்தில் சந்தித்து முறையீடு செய்யப்பட்டதின் அடிப்படையிலும் எட்டு மாதங்கள் கடந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அன்று தற்காலிக பணி நீக்கம் ரத்து செய்யப்பட்டு, மேற்படி 5 பேரும் பணியில் சேர்ந்தனர் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.  மேலும் தொடர்ந்து போராட்ட களத்தில் இருந்த சங்க நிர்வாகிக ளுக்கும் உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டக்குழு சார்பில் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியிருந்தனர். அவர்கள் பணியேற்கும் போது அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்ட கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தொடர் முயற்சியால் தற்காலிக பணி நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டதை கேக் வெட்டி கொண்டாடினர்.