திருச்சிராப்பள்ளி, நவ.22- மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் தமிழ்நாடு ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளி யன்று மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மத்திய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஓய்வூதியர் சங்கங்க ளின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் சிராஜூதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பஷீர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதி யர் சங்க மாநில துணைத்தலைவர் ராம மூர்த்தி கருத்துரை வழங்கினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கிணைப் பாளர் அருணன் சிறப்புரையாற்றினார். கருந்தரங்கில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க துணைத்தலைவர்கள் குரு நாதன், புருஷோத்தமன், செயலாளர் மதிவா ணன், பொருளாளர் துளசிராமன், இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில உதவி செயலாளர் சின்ன சாமி, கோவிந்தராஜ், தமிழ்நாடு ஓய்வு பெற்ற மின் ஊழியர் நலஅமைப்பு மாவட்ட செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்ட செயலா ளர் கிருஷ்ணன், அனைத்திந்திய அஞ்சல், ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்ட செய லாளர் சிவசுப்ரமணியன், அகில இந்திய பிஎஸ்என்எல்- டிஓடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜான்பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம் வர வேற்றார். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.