திருச்சிராப்பள்ளி, ஜூலை 24- திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியத்தில் சிஐடியு சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா தொட்டியம் எடத்தெருவில் நடைபெற்றது. விழாவிற்கு பெரியசாமி தலைமை வகித்தார். சங்க கொடியை சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் பன்னீர்செல் வம் ஏற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் ராமநாதன் வாழ்த்துரை வழங்கினார். சிஐடியு புற நகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் சிறப்புரையாற்றினார். விழாவில் ஸ்டாண்ட் தலைவர் பெரியசாமி, செயலாளர் பொன்னுசாமி, பொருளாளர் எஸ்.பெரியசாமி, துணைத்தலை வர் சந்திரசேகர், இணைத்தலைவர் ராசலிங்கம், துணைச் செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.