2 கொள்ளையர் கைது
தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூரை அடுத்த வல்லம் பகுதி வீடுகள் மற்றும் கடைகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி சீதாராமன் தலைமையில் வல்லம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள் ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இதில் சம்பந் தப்பட்ட வளம்பக்குடியை சேர்ந்த சரத்குமார்(26), வல் லத்தைச் சேர்ந்த வீரமணி(20) ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஓய்வூதியர் சங்க கூட்டம்
கும்பகோணம், ஜூன் 17- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க 8வது பேரவை கூட்டம் தலைவர் ராசகோபாலன் தலைமையில் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொது செயலாளர் பன்னீர்செல்வம் இணை செயலாளர் ராஜ குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர் அப்போது தலை வர்கள் பேசும்போது, தமிழக அரசு குடிநீர் கொள்கையை தவறான முறையில் செயல்படுத்தியதால் தற்போது தமிழ்நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ளது போல், தமிழகம் முழு வதும் குடிநீர் வடிகால் வாரியத்தை, குடிநீர் பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்டவை தெரி வித்தனர் மாநாட்டில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தி லுள்ள ஏராளமான ஓய்வு பெற்றோர் கலந்து கொண்ட னர். பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
மாட்டு வண்டி மணல் குவாரி அமைக்க கோரிக்கை
அரியலூர், ஜூன் 17- மாட்டு வண்டிக்கென மணல் குவாரி அமைக்க வேண்டு மென கோரி மாட்டு வண்டி உரிமையாளர் சங்க மாவட்ட செயலாளர், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.இளங்கோவன், துரைசாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.