tamilnadu

img

உரிமைகளுக்காக கைகள் உயரட்டும் இஸ்லாமிய பெண்கள் மாநாட்டில் வாசுகி பேச்சு

திருச்சிராப்பள்ளி, ஆக.19- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநிலக்குழு சார்பில் இஸ்லாமிய பெண்கள் சிறப்பு மாநில மாநாடு திருச்சியில் ஞாயிறு அன்று மாலை நடை பெற்றது. மாநாட்டிற்கு மாநில துணைத் தலைவர் என்.அமிர்தம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலை வர் ரேணுகா, புறநகர் மாவட்ட செய லாளர் மல்லிகா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.  மாநாட்டில் அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, மாநில பொதுச்செயலாளர் பி. சுகந்தி, மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில துணைச் செய லாளர் கீதா, முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அகில இந்திய துணைத்தலை வர் வாசுகி பேசியதாவது:  இஸ்லாமிய பெண்களுக்கான மாநாடு இப்போது நடத்துவது ஏன் என்ற கேள்வி வரலாம். இஸ்லாமிய பெண்களுக்கு சமூகத்திலும் பழ மைவாதிகளாலும் பல பிரச்ச னைகள் உள்ளன. கடந்த 5 வருடம் இஸ்லாமியர்களை தாக்க பசுக்கறி வைத்திருக்கிறார்கள் என கூறி சாட்சிகள் தேவைப்பட்டன. ஆனால் இப்போதோ கடவுளின் பெயரை சொல்லச் சொல்லி அடித்து கொலை செய்கிற நிலை மோடி ஆட்சியில் உள்ளது. ஜெய்ஸ்ரீராம் என்ற பக்தி கோஷத்தை போர் கூச்சலாக மாற்றுகின்றனர். கடவுளின் உருவத்தை உரு வகப்படுத்துவதிலும் அரசியல் உள்ளது. ஆர்எஸ்எஸ். பிஜேபி, இந்து முன்னணி நடத்தும் பிள்ளை யார் சதுர்த்தி விழாக்களில் பிள்ளை யாரின் கையில் ஏகே 47 துப்பாக்கி யை கொடுக்கின்றனர். பிள்ளை யார் சண்டைக்கு செல்ல தயாராக உள்ளது போல் சித்தரிக்கின்றனர். கடவுளின் பெயரால் ஆர்எஸ்எஸ், பிஜேபி அரசியல் நடத்துகின்றனர்.  இந்தியாவில் இஸ்லாமியர்கள் இல்லாமல் போக வேண்டும் என்பது அவர்களது குறிக்கோள். காஷ்மீரில் 67 சதவீதம் முஸ்லீம்கள் வசிக்கின்றனர். எனவே காஷ்மீரை பிரித்து அங்கு இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குடியமர்த்து வது தான் இவர்களின் நோக்கம். இந்த நிலை தமிழகத்திற்கு நாளை ஏன் வராது. இதனை கருத்தில் கொண்டு காஷ்மீருக்காக குரல் கொடுக்க வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டத்தை திருத்தி இருக்கிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சகம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி யாக கூறலாம். நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. இது அரசாங் கத்தை விமர்சனம் செய்பவர்களை ஒடுக்கும் சட்டமாகும். பசுவின் பெயரால் கொலை செய்பவர் களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது.  சூத்திரர்களிடம் கல்வி, சொத்து, ஆயுதம் இருக்கக் கூடாது என மனுநீதி கூறுகிறது. அதனை சட்ட மாக்க பிஜேபி கூறுகிறது. பிஜேபி ஆட்சியில் இந்து பெண்கள், முஸ்லீம் பெண்களுக்கும் பாது காப்பில்லை. இந்துகளுக்காக இருக்கின்றோம் என பிஜேபி கூறு வது முழுக்க பொய். இதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். சமூகத்தில் இஸ்லாமிய பெண்க ளுக்கு கல்வி, வேலை, வருமானம், சுயமரியாதை அவசியம். நமக் கான உரிமைகளுக்காக கைகள் உயரட்டும், தலைகள் நிமிரட்டும். இவ்வாறு வாசுகி பேசினார்.  முன்னதாக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சரஸ்வதி வர வேற்றார்.  நிறைவாக மாநகர் மாவட்டப் பொருளாளர் நஜ்மா நன்றி கூறி னார்.