tamilnadu

img

மண்ணச்சநல்லூரில் கிராமசபை கூட்டம்

மண்ணச்சநல்லூர், ஜூன் 29- திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.  தளுதாளப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செய லாளர் நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய அலுவலக இளநிலை உதவியாளர் ராமலிங்கம் கலந்து கொண்டார். பொதுவான கிராம சபை கூட்டம் மற்றும் நூறுநாள் வேலை பணியாளர்கள் கூட்டம் என தனித்தனியாக நடைபெற்றது.  கரியமாணிக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டத்திற்கும் ஊராட்சி செயலா ளர் நாராயணன் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் மரகதம் கலந்து கொண்டார். பூனாம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் சௌந்தரராஜன் தலைமையிலும், சா.அய்யம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் சோமசுந்தரம் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.  பெரும்பாலும் பொதுமக்கள் குடிநீர் பிரச்சனை, நூறு நாள் வேலைக்கு சம்பளம் உயர்த்த கோரியும் பேசினர். குடிநீர் பிர்சசனையை சமாளிக்க ஏற்பாடு செய்கி றோம். முடிந்த அளவு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அலுவலர்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டனர். குடிநீர் பிரச்சனை, தனிநபர் கழிவறை, நூறு நாள் வேலை, பசுமை வீடு குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.