tamilnadu

img

விநாயகநல்லூரில் கிராமசபை கூட்டம்

சீர்காழி ஜூலை 14- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடைக்கண் விநாயக நல்லூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உள்ளிட்ட விபரங்கள் குறித்த சமூக தணிக்கை கிராம சபா கூட்டம் நடைபெற்றது. தலைவர் கண்ணையன்(பொ) தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வட்டார தணிக்கை அலுவலர் பாலமுருகன் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் கடந்த 2018-19 ஆம் ஆண்டில் நடைபெற்ற பணிகள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறித்த விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு தணிக்கைக்காக வைக்கப்பட்டது. நூறு நாள் வேலை கேட்டு விண்ணப்பித்த 200 பேருக்கு வேலை அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். பணித்தளப் பொறுப்பாளர் சுகந்தி நன்றி கூறினார்.