திருச்சிராப்பள்ளி, அக்.10- மின்வாரியத்தில் பல ஆண்டு களாக பணிபுரியும் ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூ 380 வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும். பணி செய்த ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு ஊதியமாக அந்தந்த மின் நுகர்வோரிடமே பணத்தை வசூல் செய்து வழங்கும் நிலையை கைவிட வேண்டும். ஒவ்வொரு வட்டத்தில் இருந்தும் மாதாமாதம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி யாற்றவில்லை என பொய் சான்றி தழ் பெறுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டலம் சார்பில் வியாழனன்று தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் மறியல் போராட் டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். போராட் டத்தை விளக்கி மண்டல செயலா ளர் அகஸ்டின், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், திருச்சி பெரு நகர் வட்ட செயலாளர் செல்வராசு, பெருநகர் வட்ட பொருளாளர் இரு தயராஜ், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், பெரம்ப லூர் வட்ட செயலாளர் பன்னீர்செல் வம், புதுக்கோட்டை வட்ட செய லாளர் நடராஜன், கரூர் வட்ட செய லாளர் தனபால், தஞ்சாவூர் வட்ட செயலாளர் காணிக்கைராஜ், திரு வாரூர் வட்ட செயலாளர் ராஜேந்தி ரன், நாகை வட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் பேசினர். மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட பழனியாண்டி, செல்வம், ரவிச்சந்திரன், வி.செல்வம், ரியா ஜூதீன், அந்தோணிசாமி, சுப்பிர மணியன், தர்மலிங்கம், நாக ராஜன், மணிகண்டன், நடராஜன், ராதா உள்பட 1156 பேர் கைது செய் யப்பட்டனர்.