நாகப்பட்டினம், ஜூன் 18- வாலிபர் சங்க நெல்லை மாவட் டப் பொருளாளர் தோழர் அசோக் படுகொலை செய்யப்பட்டதற்கு நாகை மாவட்டம் சிக்கல் கடைத் தெருவில் திங்கட்கிழமை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிர மணியன், கே.செந்தில்குமார், விவ சாயத் தொழிலாளர் சங்க ஒன்றி யச் செயலாளர் எஸ்.என்.ஜீவா ராமன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.வடிவேல், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் வி.வி,ராஜா, ஒன்றியத் தலைவர் பி.எம்.நன்மாறன், ஏ.கே.குமார், ஏ.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர்
வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர் அசோக் படு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அதற்கு துணை போன காவல்துறையை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய ஜெயங்கொண்டம் கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடைவீதியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிளை செயலாளர் கே.சகதிவேல் தலைமை வகித்தார். கிருஷ்ணா புரம் ஒன்றிய குழு முன்னாள் உறுப்பி னர் வி.நாகராஜன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் இரா.முத்துச்செல்வன் கண்டன உரையாற்றினார். கிளை நிர்வாகிகள் சுரேஷ்குமார், லட்சும ணன், பெருமாள் ராஜ், பார்த்திபன், கர்ணன், முருகேசன், சக்திவேல், அங்கம்மாள், ராஜேந்திரன் உள் பட திரளானோர் கலந்து கொண்டனர். இதே போல் கட்சியின் நகரக் குழு சார்பில் கரூர் பேருந்து நிலை யம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரக்குழு உறுப்பினர் எம்.தண்டபாணி தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலை வர் ஜி.ரத்தினவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவா னந்தம், நகர செயலாளர் எம்.ஜோதி பாசு, சிஐடியு சங்க மாவட்ட செய லாளர் சி.முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி.ஜீவானந்தம், ஆர்.ஹோச்சு மின், கே.வி.கணேசன், வாலிபர் சங்க நகர செயலாளர் ராஜா, கட்சி சக்திவேல், ராஜேந்திரன், அஜித், வையாபுரி, கணேசன், பிரசாத், ராம கிருஷ்ணன், கோபால் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.