tamilnadu

img

தோழர் ஆர். உமாநாத் 5-ம் ஆண்டு நினைவு தினம்

திருச்சிராப்பள்ளி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முது பெரும் தலைவர் தோழர் ஆர். உமாநாத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று திருச்சியில் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி பொன் மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் நிர்மலாராணி, ராஜ்குமார், மாநகர் மாவட்டச் செய லாளர் ஆர். ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ரபீக், வீரமுத்து, சின்னசாமி, மாவட்டச்செயற் குழு உறுப்பினர் லெனின், பொன்மலை பகுதிக்குழு செயலாளர் கார்த்திகேயன், தீக்கதிர் பொது மேலாளர் பன்னீர்செல்வம், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சுப்ரமணி, சிவராஜ், மல்லிகா, திருவெறும்பூர் தாலுகா செயலாளர் நடராஜன், மண்ணச்சநல்லூர் ஒன்றியச்செயலாளர் கனகராஜ், துறை யூர் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரெங்க நாதன், பழனிசாமி, பன்னீர் செல்வம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புற நகர் மாவட்டச் செயலாளர் மல்லிகா, மாவட்டத் தலை வர் லிங்கராணி, மாநகர் மாவட்டச் செயலாளர் சர ஸ்வதி, நிர்மலா, திலகவதி, துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், பெல் அருணன், ஆட்டோ சங்க நிர்வாகிகள், டிஆர்இயு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.