tamilnadu

img

நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் வாயிற் கூட்டம்

 திருவாரூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்க தீர்மான விளக்க வாயிற்கூட்டம் திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பு மண்டல தலைவர் கே.கே.ஜோதிபாசு தலைமையில் நடைபெற்றது.  தீர்மானங்களை விளக்கி சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் வி.குமார், டி.என்.சி. எஸ்.சி.சங்க மாநில பொதுச்செயலாளர் ஆர்.புவனேஸ்வரன், மண்டல செயலாளர் ஆர்,மோ கன், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், பொருளாளர் கே.எஸ்.இராஜா ஆகியோர் பேசினார்கள். முன்னதாக சங்கத்தின் பெயர் பலகையை வி.குமார் திறந்து வைத்தும், சிஐடியு கொடியினை ஆர்.புவனேஸ்வரன் ஏற்றி வைத்தார்கள். சங்க மாநில பொதுச் செயலாளர் ஆர். மோகன், மாவட்ட பொருளாளர் கே.எஸ்.ராஜா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.