tamilnadu

img

கொரடாச்சேரி, மன்னார்குடியில் கட்சி உறுப்பினர் அட்டை வழங்கல்

குடவாசல், மே 20-திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு கார்டு வழங்கும் பேரவை நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றிகட்சி உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் கார்டு வழங்கினர். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமிமற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.கட்சி உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கும் பேரவை மன்னார்குடியில் திங்கட்கிழமை நடைபெற்றது. மன்னார்குடி ஒன்றிய நகர குழுக்கள் சார்பாகநடைபெற்ற பேரவைக்கு நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம் முன்னிலை வகித்தார். பேரவையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்வி.எஸ்.கலியபெருமாள். மாவட்டக்குழு உறுப்பினர் கள் டி.முருகையன், டி.சந்திரா உள்ளிட்டோர் உரையாற்றினர். கட்சி மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து, ஒன்றிய நகரக் குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கி ஸ்தாபனம் மற்றும்கட்சி உறுப்பினர்களின் கடமைகள் என்ற தலைப்பில்சிறப்புரையாற்றினார். பேரவையில் 170 கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.