திருவண்ணாமலை. செப்.11- திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், போடப் பட்ட மண் சாலை மற்றும் ஜல்லி சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அவற்றை விரை வாக சீரமைக்க வேண்டு மென ஆதிவாசி கூட்டமைப்பி னர் கோரிக்கை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். வன உரிமைச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றும் வரை, வனத்தை விட்டு ஆதிவாசி மக்களை வெளி யேற்ற கூடாது. மனு கொடுத்த அனைவருக்கும் உடனடி யாக பட்டா வழங்க வேண் டும், மலைப் பகுதியில், அரசு புறம்போக்கு நிலங்களை பயிர்செய்ய, பழங்குடி மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும், தாட்கோ மூலம், பழங்குடியினர் விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு, உடனே இணைப்பு வழங்க வேண்டும். ஜமுனாமரத்தூர் வட்டத்தை தனி சட்டமன்ற தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நிர்வாகிகள் உரை யாற்றினர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் டி. வெங்கடேசன் தலைமை தாங்கினார்.