திருவண்ணாமலை, டிச. 10- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் நிதி யளிப்புக் கூட்டம் நடை பெற்றது. சென்னையில் வரும் ஜனவரி மாதம் இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்திய 16 ஆவது மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி நடை பெற்ற நிதியளிப்புக் கூட்டத் தில், பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ.88 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. கூட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமை தாங்கி னார். போக்குவரத்து தொழிற் சங்க நிர்வாகி எஸ்.முரளி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்டச் செய லாளர் ஜி.ராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மைய மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு தொடக்க உரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஈ.முத்துகுமார் சிறப்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் கே. காங்கேயன், பொருளாளர் எஸ்.தண்டபாணி மற்றும் சங்க நிர்வாகிகள் எம்.வீரபத்திரன், ஆர். சிவராஜ், எம்.ஜீனத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.