திருவள்ளூர் ஜூன் 17 இருளர் இன மக்கள் தொழில் தொடங்க வழங்கப்படும் தனிநபர் கடனுக்கான நிபந்த னைகளை தளர்த்த வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், சோழவரம் ஆகிய ஒன்றிங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தில் உள்ளனர். ஊரடங்கால் மாற்றுத் திறனாளிகள், நலிவுற்றோர், இருளர் இன மக்கள் வருமானம் இழந்து தவிக்கின்றனர். இந்த திட்டத்தில், தனிநபர் கடன்பெற ஏதாவது ஒரு தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுயிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படு கிறது. இதனை தளர்த்தி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்வாதார கடனாக ரூ.20-ஆயிரம் வழங்க வேண்டும். தனிநபர் தொழில் கடன் பட்டியலில் இரு ளர் இன மக்கள் ஒருவர் கூட இடம் பெற வில்லை. எனவே, நிபந்தனைகளை தளர்த்தி அந்த சமூக மக்களும் தொழில் செய்ய தனி நபர் கடனை வழங்க வேண்டும் என்று இத்திட் டத்தின் மாநில முதன்மை செயல் அலுவலர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோருக்கு தமிழ்நாடு மலை வாழ் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழரசன் கடிதம் எழுதியுள்ளார்.