tamilnadu

img

தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை, சீருடை

திருவள்ளூர் மார்ச் 15-  தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில்  தூய்மை காவ லர்கள், துப்புரவு தொழி லாளர்கள், டேங்க் ஆபரேட்ட ர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். மிகவும் குறைந்த ஊதியத்தில் பணி யாற்றும் இந்த தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை, சீருடைகள், சோப்பு, காலணி, கையுறை, குப்பை அள்ளும் வண்டி வழங்க வேண்டும் என நீண்ட காலமாக சிஐடியு சார்பில் போராட்டம் நடை பெற்று வருகிறது. ஆனால் அதிகாரிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் அண்மை யில் நடைபெற்ற கிராம உள்ளாட்சிமன்றத் தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஞாயிறு முதல் நிலை ஊராட்சியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் ஜி்.வி.எல்லையன் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். பின்னர் ஊராட்சியில் பணியாற்றும் தொழிலாள ர்களின் கோரிக்கைகளை ஏற்று தூய்மை காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் ஆகிய 15 பேருக்கு அடை யாள அட்டை, சீருடை, காலணி, முகக் கவசம்  உட்பட பல கருவிகளை ஞாயிறன்று (மார்ச் 15) வழங்கினார். தமிழகத்தில் முதன் முறையாக தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை, சீருடை உள்ளிட்ட வற்றை வழங்கி பெருமை சேர்த்த ஞாயிறு ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.வி.எல்லையனின் பணியை திருவள்ளூர் மாவட்ட ஊரக  வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ஜி.சந்தானம் பாராட்டி னார். இதில் வார்டு உறுப்பி னர் கண்ணகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்