tamilnadu

img

சட்டவிரோதமாக மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை

அவிநாசி, ஜூலை 17- அவிநாசி  பகுதியில்  அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் இயங்கும் மதுக்கடையையும், பார்களையும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ள தாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ள னர்.  அவிநாசி காவல் சரகத்திற்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் பின்புறம், கால்நடை பேருந்து நிறுத்தம், கந்தம் பாளையம்  உள்ளிட்ட 30 இடங்களில்  டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடை களில் அருகிலேயே பார்கள் செயல்படு கின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல்  நேரம் செயல்படுகின்றன.  இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  டாஸ்மாக் கடை நண்பகல் 12  மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை செயல்படுத்த உயர்நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் அவிநாசி பகுதியில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு  விற்கப்படுகின்றன. இதேபோல் பார் களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படு கின்றது. மேலும் தின்பண்டங்கள் கூடுதல்  விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.  குறிப்பாக புதிய பேருந்து நிலையத் திற்கு பின்புறம் உள்ள பார் அங்கீகாரம் பெற வில்லை. ஆனால் 24 மணி நேரமும் செயல் படுகிறது. இதனால் மது பிரியர்களால் கடும் தொல்லைகளுக்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆளாகி  உள்ளனர். இதனை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதுடன்,  அதற் காக குறிப்பிட்ட தொகை ‘மாமூலாக’ பெறுவதாக தெரிய வருகிறது.  எனவே  சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பொதுமக்கள் தெரிவித்தனர்.