tamilnadu

img

நிவாரணம் கோரி விவசாய தொழிலாளர்கள் மனு

அவிநாசி, மே .12 - விவசாயத் தொழிலாளர்கள்  உரிய நிவாரணம் வழங்க கோரி செவ்வாயன்று கோரிக்கை மனு அளித்தனர். கொரோனா வைரஸ் காரண மாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இதனால் விவசாயத் தொழிலா ளர்கள் வாழ்வாதாரம் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு முறையாக நிவாரணப் பொருட் கள் வழங்கிட வேண்டும். கிரா மப்புற 100 நாள் வேலை திட்டத் தில் பணி செய்துள்ள விவசாயத்  தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள பாக்கி தொகையினை வழங்கிட வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக் கும் ரூ.7500 நிவாரணத் தொகை யாக வழங்க வேண்டுமென தமிழ் நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அவிநாசி யிலுள்ள 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் ஒன்றிய செயலாளர் ஏ. சண் முகம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் எஸ். வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் வி.பி. முருகேஷ் மற்றும் ஒன்றிய தலைவர் எஸ். மல்லப்பன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னூர்
இதேபோல், அன்னூர் ஒன் றியத்திற்குட்பட்ட மச்ச கவுண்ட செட்டிபாளையம், பச்சாபாளை யம், ஒட்டர்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு விவ சாயத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இதில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் முசீிர், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கபீர், சத்தியராஜ், ராஜேந்திரன் மற்றும் ஆறுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரியில் அரூர் வட்டம் செல்லம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். முத்து மனு அளித்தார். மேலும் வேட்டரப்பட்டி ஊராட்சி செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய  செயலாளர் ஆர். மல்லிகா ஒன் றியக்குழு உறுப்பினர் வேடியப் பன் ஆகியோர் மனு அளித்தனர். பாப்பிரெட்பட்டி வட்டம் மோளை யானூர் ஊராட்சித் தலைவர் துரைபாண்டியிடம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. கிருஷ்ண வேணி, அறிவுமணி மற்றும் ஜெயந்தி ஆகியோர் மனு அளித் தனர். தருமபுரி ஒன்றியம் கொண்டம்பட்டி ஊராட்சித் தலை வர் பழனியம்மாள் சரவணனிடம் ஒன்றிய செயலாளர் டி. மாரி யப்பன் மனு கொடுத்தார். காரி மங்கலம் ஒன்றியத்தில் ஜிட் டாண்ட அள்ளி, பிக்கன அள்ளி, அண்ணாமலைஅள்ளி மற்றும் ஜக்கசமுத்திரம் ஆகிய பஞ்சா யத்துகளில் விவசாயத் தொழி லாளர் சங்க வட்டச் செயலாளர் சி. ராஜா, வட்ட நிர்வாகிகள் பி.  முருகன், மாதேஷ் மற்றும் கிரு ஷ்ணன் ஆகியோர் மனு அளித் தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி கிணத்துக்கடவு தாலுகா வடசித்தூர் ஊராட்சி அலு வலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் கிணத்துக் கடவு தாலுகா தலைவர் ஆனந்த ராஜ் தலைமை வகித்தார். இதில் வடசித்தூர் வார்டு  உறுப்பினர் சித்ரா மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொறுப் பாளர்கள் முத்துக்குமார், சபரி மற் றும் மாணவர் சங்கத்தின் பொறுப் பாளர் ரமேஷ்கண்ணன் ஆகி யோர் உடனிருந்தனர்.