tamilnadu

பல்லடம் அருகே “ஸ்டெர்லைட்” ஆக மாறும் ஒரு இரும்பாலை! விரிவாக்கம் செய்ய கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

திருப்பூர், நவ. 3 – திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே செயல்பட்டு வரும் தனியார் இரும்பாலை உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்கு இடையில், உற்பத்தியை அதிகரிக்க ஆலையை விரிவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை யைப் போல் சுற்று வட்டார மக்களின் வாழ்வாதாரம், சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், அரசு நிர்வாகம் இந்த ஆலை விரி வாக்கத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று உள்ளூர் மக்கள் கூறு கின்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், அனுப்பட்டி கிராமத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கண்ணப்பன் அலாய் அண்டு ஸ்டீல் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் அமைக்கப் பட்டது. “கிஸ்.,கிஸ்., கிஸ்கால்” எனும் இரும்பு கம்பிகள் விளம்பரத்தை யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். ஆம் அந்த கம்பிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் இந்நிறுவனம். இங்கு 28 ஆயிரம் டன் அளவுக்கு இரும்பு உற்பத்தி நடைபெறுகிறது.  அனுப்பட்டி  ஊராட்சியில் 800க் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 170 குழந்தைகள் படிக்கும் நடுநிலைப் பள்ளியும், 30 குழந்தைகள் கொண்ட பால்வாடியும் உள்ளது. கூட்டுறவு வங்கி, சுய உத விக் குழுக்கள் மூலம் கடன் பெற்று தறித் தொழில், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத் தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். ஆவின் உள்பட நான்கு பால் கொள்முதல் நிலையங் களும் செயல்பட்டு வருகின்றன. இந்த ஊரில் பெருவாரியான நிலங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளன.

இதில் காற்றாலைக்கு கொடுக்கப் பட்ட நிலம் போக மீதி நிலத்தில் விவ சாயம் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு இடத்தில் தொழிற் சாலைகள் உருவாக்கப்பட்டால் தொழில் வளம் பெருகும், வேலை வாய்ப்புகள் உருவாகும். மக்களின் வாழ்நிலை உயரும். உள்கட்டுமான பணிகள் மேம்படும். பல்வேறு உப தொழில்களுக்கான வாய்ப்பு உரு வாகும். ஆனால் மக்களின் வாழ்க்கை யும், ஆரோக்கியமும் கேள்விக்குறி யாகும் நிலை தற்போது ஏற்பட்டுள் ளது. ஆரம்பத்தில் இந்த ஆலை தொடங்கப்பட்டபோது சுற்று வட் டார மக்களுக்கு இதன் தாக்கம் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆனால் கடந்த 9 ஆண்டு காலத்தில் இந்த ஆலையால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை உணர்ந்து தற்போது மக்கள் இந்த ஆலையை மூட வேண் டும் என வற்புறுத்தும் நிலைக்குச் சென்றுவிட்டனர். கடந்த 8 ஆண்டுகளில் காற்று மாசு அடைந்துள்ளது. இரும்புக் கழிவுகள் நிலத்தில் (போர்வெல்) துளைகள் போட்டு இறக்கப்படுகிறது. கடந்த நான்கைந்து ஆண்டுகளில் கிராமத் தைச் சுற்றி சுமார் 22 பேர் புற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். மழை பொழியும்போது, வீட்டின் கூரை மேல் உள்ள காற்று மாசால் கறுப்பாக பொழி கிறது. செடி, கொடிகள் கூட பாதிப்புக் குள்ளாகியுள்ளன. விவசாய நிலத்தின் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை. இதுபோன்ற பாதிப்புகளுக்குத் தீர்வு காணப்படாமல் இருக்கும் நிலையில், ஆலையின் உற்பத்தித் திறனை 28 ஆயிரம் டன்னிலிருந்து 88,800 டன் என மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்க விரிவுபடுத்தும் பணி யில் ஆலை நிர்வாகம் இறங்கியுள்ளது. இது இந்த வட்டார மக்களை மேலும் ஆத்திரமூட்டுவதாக மாறியுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கிராம மக்களின் எதிர்ப்பு வலுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய உற்பத்தி நிலையிலேயே பாதுகாப் பற்ற முறையில் ஆலை வெளியேற்றும் நச்சுப் புகையினால் கண் எரிச்சல், மூச் சுத் திணறல், தோல் நோய், புற்று நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக மக்கள் கூறு கின்றனர். இந்நிலையில் ஆலை விரி வாக்கத்தினால் அனுப்பட்டி கிராம மும், சுற்று வட்டார கிராமங்களும் கடும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவித்து  உள்ளனர். இதைப் பற்றி, கிராம சபை கூட் டங்களில் தீர்மானம் நிறைவேற்றி யதுடன், முதல்வர், மாவட்ட ஆட்சி யர் உள்பட அதிகாரிகளிடம் மனுவும் அளிக்கப்பட்டது. எதிர்ப்புப் போராட் டமும் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆலை செயல்படுவதாக  நிர்வாகம் தவறான தகவலை அளித்து மக்கள் எதிர்ப்பை திசை திருப்புகிறது. அரசு நிர்வாகமும் உரிய தலையீடு செய்யா மல் உள்ளது. இந்த ஆலை விரிவாக்கம் தொடர் பாக மேற்படி நிறுவனத்தின் நிர்வா கம், அல்ட்ரா டெக் எனப்படும் தனி யார் சுற்றுச்சூழல் ஆய்வகத்தின் மூலம் துரித சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட் டைத் தயாரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி முடிய மூன்று மாத காலம் இந்த ஆய்வு மேற்கொள் ளப்பட்டுள்ளது. இதில் அனுப்பட்டி யில் ஆலை அமைந்துள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோ மீட்டர்  சுற்றளவில் ஆய்வு செய்யப் பட்டதாக கூறப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பின்படி இந்த கிராமத்தை மையப் படுத்தி 10 கிலோமீட்டர் சுற்றளவில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 352 மக்கள் வசிக்கிறார்கள். திட்ட அமைவிடம், சுற்றுச்சூழல் விபரங்கள், உற்பத்தி விபரம், மூலப் பொருட்கள், மின் சக்தி மற்றும் எரி பொருட்கள் தேவைகள், தேவையான நீர், தேவையான தொழிலாளர்கள், உற்பத்தி செயல்முறை, வானிலை ஆய்வு, சுற்றுப்புறக் காற்றின் தரம், மேற்பரப்பு நீரின் தரம், நிலத்தடி நீரின் தரம், மண்ணின் தரம், சுற்றுப் புற ஒலி அளவு, தாவரங்கள் மற்றும் விலங்குகள் திடக்கழிவு மேலாண்மை, பேரிடர் மேலாண்மைத் திட்டம் போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. இந்த ஆய்வுகள் செய்யப்பட்டதில் காற்று, நீர், ஒலி என அனைத்து அம் சங்களும் வரம்புக்கு உட்பட்ட அளவி லேயே இருப்பதாக குறிப்பிடப்பட் டுள்ளது. அத்துடன் இந்த அறிக்கையில் பக்கம் 9-இல் காற்றின் மீதான தாக் கம் என்ற துணைத் தலைப்பில் “ஆலை விரிவாக்கத்தினால் மிதக்கும் துகள் கள், சல்பர்-டை–ஆக்சைடு மற்றும் நைட்ரஜன்–டை–ஆக்ஸைடு ஆகியன முக்கிய மாசு காரணிகளாக வெளிப்படும்.

அவற்றை கட்டுப்படுத்த போதுமான மாசுகட்டுப்பாட்டு கரு விகள் அமைப்பதற்கு முன்மொழியப் பட்டுள்ளது. காற்று காரணிகளின் அளவு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தால் அமைக்கப்பட்ட அளவுகளுக்கு மிகாமல் இருக்கும் என்று ஆராயப் பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. முக்கிய மாசு காரணிகளாக வெளிப்படக்கூடிய இந்த நச்சு வாயு களை கட்டுப்படுத்த போதுமான மாசு கட்டுப்பாட்டு கருவிகள் எவை, எவை, எப்படி கட்டுப்படுத்தப்படும் என்ப தைத் தெரிவிக்கவில்லை. அதேபோல் நாளொன்றுக்கு 1.4 கிலோ ஸ்கிரிப்பர் கழிவுகளை சூரிய உலர்பான்களில் சுத்திகரிப்பு செய்யப்படும், ஆலை வளாகத்துக்கு வெளியே எந்த ஒரு கழிவுநீரும் வெளியேற்றப்படாது என் றும் கூறியுள்ளனர். ஆனால் ஆலைக் குள்ளேயே கழிவுநீரை வெளியேற்றி னாலும் சுற்றிலும் நிலத்தடி நீராதாரம் பாதிக்காது என்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை.  இத்திட்டத்தில் மாசுத் தடுப்பு கரு விகள் மற்றும் செயல்பாட்டினை கண்காணிக்க சுற்றுச்சூழல் கண் காணிப்புத் திட்டம் அவசியம் ஆகிறது என கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த கண்காணிப்புத் திட்டம் தொடர்பான  தெளிவான விபரங்கள் ஏதுமில்லை. குறிப்பாக உள்ளூர் மக்களின் பங் கேற்புடன் கண்காணிப்பு மேற்கொள் ளப்படும்போதுதான் உண்மையான நிலையை நாம் அறிய முடியும்.

தேவை யான தலையீடு செய்ய முடியும். ஆனால் அதைப் பற்றி குறிப்பிட வில்லை. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் முடிவுரையில், உருக்காலை விரி வாக்கத் திட்டமானது, “இப்பகுதி சுற்றுச்சூழலின் மேல் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தினை ஏற்படுத்து வதாக உள்ளது….சிறப்பான மற்றும் சரியான மாசுக்கட்டுப்பாடு தடுப்பு முறைகளின் மூலம் உத்தே சிக்கப்பட்டுள்ள நவீனமயமாக்கல் திட்டமானது அங்கு வசிக்கும் சமூகத்தினர்க்கு பயனளிப்பதாக..அமையும்,” என கூறப்பட்டுள்ளது. ஆக நிச்சயம் இப்பகுதியில் சுற் றுப்புறச் சூழலின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தும் என அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கையிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுப்புறச் சூழலை சீர் குலைத்ததுடன், உள்ளூர் மக்களிடம் வெளிப்படைத் தன்மையாக நடந்து கொள்ளவில்லை. அத்துடன் மக்க ளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் களை யவும் நடவடிக்கை எடுக்காமல் அலட் சியமாக செயல்பட்டது. அரசு நிர்வாக மும் ஒருதலைப்பட்சமாக அந்தப் பெரு நிறுவனத்துக்கு ஆதரவாகவே இருந் ததால்தான் மிகப்பெரும் மக்கள் போராட்டம் ஏற்பட்டது கவனிக்கத்தக் கது.  இதேபோல் அனுப்பட்டியிலும் ஒரு இரும்பாலை அமைக்கப்பட்டு 9 ஆண்டுகளாக மக்களுக்கு சுகாதார சீர்கேட்டையும், பாதிப்பையும் ஏற் படுத்தி வருகிறது.

இப்போது நடத்தப் பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்திலும் மக்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள் ளனர். அத்துடன் அந்த நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும், சூழல் பாதிப்பு ஏற்படும் என்றே குறிப்பிட் டுள்ளது. இத்தகைய நிலையில் தற்போதுள்ள பாதிப்பு அதிகரிக்கும் என்பது உறுதியாகிறது. எனவே மக்களின் கருத்துக்கு செவி சாய்க்காத நிறுவனத்தை மக்கள் அனுமதிக்கப் போவதில்லை. அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிற்சாலைகள் மக்களை வாழ வைக்கவா அல்லது சாகடிக்கவா? இந்த நியாயமான கேள்வி அரசின் செவிகளில் கேட்குமா? கேட்க வைப் போம் என கிராம மக்கள் அணி திரள் கின்றனர்! நவம்பர் 6 அன்று கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் இந்த ஆலைக்கு எதிராக பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் இந்த வட்டார மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்று அரசின் கவனத்தை ஈர்க்கவும் முடிவு செய்துள்ளனர். மக்களின் கருத்துக் கேற்ப அரசு உரிய தலையீடு செய்ய வேண்டும் என்பதே இந்த வட்டார மக்களின் எதிர்பார்ப்பு.  (ந.நி)