திருப்பூர், ஆக. 9 - படுகொலை செய்யக்கூடும் என்ற அச்சுறுத்தலி னால் காதல் ஜோடி திருப்பூர் காவல் நிலையத்தில் தஞ் சம் அடைந்து பாதுகாப்பு கேட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், புதுக்கோட்டை பகுதி யைச் சேர்ந்தவர் காயத்ரி. அப்பகுதியில் உள்ள அலெக்ஸ் பாண்டியன் என்பவரை இரண்டு வருடங் களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில், காயத் ரியை விட 17 வயது மூத்தவரான தாய்மாமன் முத்து லிங்கம் என்பவருக்கு காயத்ரியை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயற்சி செய்துள்ளனர்.
அதோடு சொந்த ஊரில் இருந்து 20 கிலோமீட்டர் தூர முள்ள மோசக்குடிக்கு கட்டாயப்படுத்தி அவரை அழைத்துச் சென்று சித்திரவதை செய்துள்ளனர். இதனால் காயத்ரி அங்கிருந்து தப்பி அலெக்ஸ் பாண்டியனோடு திருப்பூர் வந்து விட்டார். கடந்த ஆக. 2 ஆம் தேதி இந்த ஜோடி திருமணம் செய்து கொண்ட னர். இந்நிலையில், முத்துலிங்கம், முருகன் உட்பட காயத்ரியின் தாய்மாமனின் உறவினர்கள் அலெக்ஸ் பாண்டியனின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அவர் களைக் கொன்று விடுவதாகவும், மேலும் காயத்ரியை யும், அலெக்ஸ் பாண்டியனையும் எங்கு பார்த்தாலும் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டல் விடுத்த தாகவும் தெரிய வந்துள்ளது. இந்த விபரத்தை திருப் பூர் வடக்குக் காவல் நிலையத்தில் தெரிவித்த காயத்ரி, அலெக்ஸ் பாண்டியன் இருவரும், தங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு புகார் மனு அளித்துள்ளனர்.