அவிநாசி, செப். 20- அவிநாசி அருகே குன்னத்தூரில் அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி, குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மண் திருட்டு நடைபெற்று வரு கிறது. இதுதொடர்பாக வருவாய்த்துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந் நிலையில், குன்னத்தூர் அருகே நல்லிகவுண்டன் பாளையம் குட்டையில் அனுமதியின்றி மண் அள்ளிய லாரியை வரு வாய்த் துறையினர் பறிமுதல் செய்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து குன்னத்தூர் காவல் துறையினர் லாரி ஓட்டுநரான கருப்புசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.