tamilnadu

சேவூர் பகுதியில் மும்முனை மின்சாரம் தடை

அவிநாசி, பிப். 16- அவிநாசி அருகே சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் கடந்த இரண்டு நாட்களாக தடைப் பட்டுள்ளது. அவிநாசி அருகே சேவூர் பகுதியில் வடுகபாளையம், கானூர்புதூர் ஆகிய பகுதிகளில் மும்முனை மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் சேவூர், ராமியம்பாளையம், அசநல்லிபாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந் தைப்புதூர், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பாங் குளம், வாலீயூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளை யம், கூட்டப்பள்ளி, சாவக்கட்டுப்பாளையம் ஆகிய பகுதி களில் பனியன், விசைத்தறி உள்ளிட்ட தொழில்கள் பாதிக் கப்பட்டுள்ளன. மோட்டார்கள் இயக்க முடியாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சேவூர் துணை மின் நிலையத்தில் விசா ரித்த போது, மின்மாற்றி பழுது எற்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிவடைய இன்னும் நான்கு நாட்கள் ஆகும். அதுவரை அருகிலுள்ள துணை மின் நிலையங்களிலிருந்து மின் இணைப்பு வழங் கப்பட்டுள்ளது. சீரமைப்புப்பணிகள் முடிந்து சேவூர் துணை  மின் நிலையத்திலிருந்து சீராக மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தனர்.