tamilnadu

img

திருப்பூரில் உடைத்து வீசப்பட்ட வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள்

திருப்பூர், மார்ச் 1 – திருப்பூரில் மாநகராட்சிப் பள் ளியில் பாதுகாத்து வைக்கப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று உடைத்து உள்ளே இருந்த உதிரி பாகங்களைத் திருடிச் சென்ற னர். இது பற்றிய விபரம் வருமாறு: கடந்த 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந் தால் இலவச வண்ணத் தொலைக் காட்சி பெட்டி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. அதன்படி இலவச வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகள் மக்களுக்கு வழங் கப்பட்டன. ஆனால் 2011ஆம் ஆண்டு  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட் சிக்கு வந்தது, அப்போது இத்திட் டத்தை அதிமுக அரசு ரத்து செய்தது. ஏற்கெனவே வாங்கப்பட்டு மக்க ளுக்கு வழங்கப்படாமல் இருந்த ஒரு  லட்சத்து 27 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை ஆத ரவற்ற இல்லங்கள், அரசுப் பள்ளிகள், பஞ்சாயத்துகள், சுகாதார நிலையங் கள், அங்கன்வாடி போன்றவற்றுக்கு வழங்கப்பட உள்ளதாக அரசுத் தரப் பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூரில் நூற்றுக் கணக்கான தொலைக்காட்சிப் பெட்டிகள் கடந்த 2011ஆண் ஆண்டு  முதல் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு அறை யில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு சொன்னபடி வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே கடந்த 9 ஆண்டு காலமாக அந்த அறையிலேயே கேட்பாரற்றுக் கிடந்தன. இதற்கிடையே அவ்வப் போது மர்ம நபர்கள் இந்த அறையில் உள்ள வண்ணத் தொலைக்காட்சி  பெட்டிகளை திருடுவதற்கும் முயற் சித்த சம்பவங்கள் நடைபெற்றதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்த னர். இந்நிலையில், ஞாயிறன்று காலை பார்த்தபோது பாதுகாப்பு கட்டிடத் தின் பின்புறத்தில், இதுவரை பாது காத்து வைக்கப்பட்டிருந்த வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் உடைக் கப்பட்டு கிடந்தன. தொலைக்காட்சி பெட்டிகளின் உள்ளிருந்த பாகங்கள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன. இத்தகவலறிந்து சம்பவ இடத் துக்கு சென்ற பள்ளி நிர்வாகிகள் ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் சிலர் அந்த கட்டிடத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து, உள்ளே புகுந்து வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைத் திருட்டுத்தனமாக வெளியே எடுத்து வந்து உடைத்து உதிரி பாகங்களைத் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது பற்றி மாநகராட்சி பள்ளி என்ற முறையில், மாநகராட்சி நிர்வா கத்திடம் தகவல் தெரிவித்திருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகமோ, இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டி கள் வருவாய்த் துறைக்குச் சொந்த மானவை என்று கூறுகின்றனர். இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது திருப்பூர் மாநகராட்சி ஆணை யர் கே.சிவக்குமார், வருவாய்த்துறை யினர் பொறுப்பிலேயே இதுவரும். இருப்பினும் சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, முதல் தகவல் அறிக்கையை மாநகராட்சிக்கு அளிக்கும்படி கூறியுள்ளோம். மாநக ராட்சி உதவி ஆணையர் தலைமை யில் விசாரணை நடத்தவும் உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.