தூத்துக்குடி, ஜூன் 11- சென்னையில் இருந்து உரிய அனுமதி பெறாமல், கோவில்பட் டிக்கு காரில் வந்த மணமகன் உள்பட 6 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்துபுதனன்று நடை பெறுவதாக இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த 32 வயதான வாலிபர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் புதனன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய் யப்பட்டது. இதற்காக மணமகன் உள்ளிட்ட குடும்பத்தினர் 6 பேர், சென்னையில் இருந்து காரில் கோவில்பட்டிக்கு புறப்பட்டு வந்த னர். அப்போது அவர்கள், அங் குள்ள மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறவில்லை.
செவ்வாய் மாலையில் தூத்துக் குடி மாவட்ட எல்லையான கோவில்பட்டி அருகே தோட்டிலோ வன்பட்டி விலக்கு சோதனைச் சாவடியில் வந்தபோது, அங்கி ருந்த போலீசார், காரில் இருந்த வர்களிடம் விசாரித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வா கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. சென்னையில் இருந்து உரிய அனுமதி பெறாமல் வந்ததால், மணமகனின் குடும்பத்தினரை கோவில்பட்டிக்கு செல்ல அனு மதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் சென்னைக்கு திரும் பிச் செல்வதாகக் கூறிச் சென்ற னர். ஆனால், அவர்கள் மாற்றுப் பாதை வழியாக, கோவில்பட்டி அருகே ஆவல்நத்தத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்ற னர். இதனை அறிந்த அரசு அதி காரிகள், ஆவல்நத்தத்துக்கு சென்று, மணமகன் உள்ளிட்ட 6 பேரையும் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் தங்க வைத்து தனிமைப்படுத்தி னர். பின்னர் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத் தப்பட்டது. இதையடுத்து புத னன்று நடைபெற இருந்த திரு மணம் நிறுத்தப்பட்டது.