tamilnadu

தந்தை - மகன் உயிரிழப்பு காணொலி மூலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்

தூத்துக்குடி, ஜூன் 27- சாத்தான்குளத்தில் தந்தை - மகன் உயி ரிழந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வெள்ளியன்று நிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் உயிரி ழந்த விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தாக்கல் செய்யவும், விசாரணை அறிக்கை மற்றும் உடற்கூராய்வு வீடியோ  பதிவு ஆகியவற்றை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தர விட்டது.  அதனடிப்படையில் மாவட்ட எஸ்.பி. விசா ரணை அறிக்கை உள்ளிட்டவற்றை மதுரைக்கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். மேலும், காணொலி மூலமாக நீதிமன்ற விசாரணையில் ஆஜராகிறார்.