தூத்துக்குடி,அக். 13- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் விழாக்காலத்தை முன்னிட்டு வாடிக்கையா ளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்க ப்பட்டுள்ளது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு காலத்திற்கேற்றாற் போல் பல்வேறு அதி நவீன வசதிகள், சிறப்பு சலுகைகளை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வழங்கி வரு கிறது. அந்த வகையில் தற்போது விழாக்கா லத்தை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் நவம்பர் 16ம் தேதி வரை தமிழ்நாடு மெர்க்க ன்டைல் வங்கியின் அனைத்து கிளைகளி லும் வாடிக்கையாளர்கள் பெறும் வீட்டுக்க டன்களுக்கு பரிசீலனை கட்டணம் ரூ. 2500 ஆகும். கார் லோன்களுக்கு பரிசீலனை கட்டணம் ரூ. 1000 ஆகும். இதர வியாபார கடன்களுக்கு பரிசீலனை கட்டணத்தில் 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கை யாளர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனை வோர், வியாபாரிகள் அருகிலுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையை அணுகி விபரம் தெரிந்து கொள்ளலாம் என அறிவி க்கப்பட்டுள்ளது.