தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த 1 வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் பரவலாக தண்ணீர் நிறைந்து காணப்படுகின்றன. மழை கார ணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. இதையடுத்து சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணை யர் கை.கோவிந்தராஜன் தலைமையில், பணியாளர்கள் தேங்கிக் கிடந்த தண்ணீரை, பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொரட்டூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதி யில் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக வாய்க்கால் அமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அதே போல் குப்பத்தேவன் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் புயல் பாதுகாப்பு மையத்தினை சுற்றி தேங்கிக் கிடந்த மழைநீர் வெளியேற்றப்பட்டது. பேராவூரணி வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி நடைபெற்று வரும் பணி களை ஆய்வு செய்தார். அப்போது சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் கை.கோவிந்தராஜன், ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.