தஞ்சாவூர் அக்.21- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பேராவூரணி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் அங்கு நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.ஜி.செந்தில் குமார், டெங்கு விழிப்புணர்வு உரையாற்றினார். கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.கருணாநிதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.பி.ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் எம்.சுந்தர்ராஜன், தெட்சிணாமூர்த்தி, உதவி தலைமைஆசிரியர் கே.சோழபாண்டியன், ஆசிரியர்கள் சற்குணம், அடைக்கலமணி, இளந்திரையன், விக்டர்ட் பெஸ்கி, ராஜேந்திரன், சத்தியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.